தமிழ் பூக்கள்

எனக்கு பிடித்தவை அனைத்தும்....(அனுபவம், பூக்கள், பாடல், நகைச்சுவை என..)

Sunday, March 8, 2009

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்


படம் : சுப்பிரமணியபுரம்
இசை : ஜேம்ஸ் வசந்தன்
பாடகர்கள் : பெலி ராஜ் & தீபா மரியம்


ஆ…..ஆ….

ஆண் : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுதாய் இழுதாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

(கண்கள் இரண்டால்)

பெண் : பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேன்
மாற்றிக் கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசையில்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

ஆண் : இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா

பெண் : மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை

ஆண் : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுதாய் இழுதாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

பெண் : திரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதிற்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளை போல்வந்து கலந்திட்டாய்


ஆண் : உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊனுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர

பெண் : கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசையில்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

ஆண் : பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதுமென நான்
நினைப்பேன் நகர்வேனே மாற்றி

பெண் : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
எனை கட்டி இழுதாய் இழுதாய் போதாதென

ஆண் : சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home