தமிழ் பூக்கள்

எனக்கு பிடித்தவை அனைத்தும்....(அனுபவம், பூக்கள், பாடல், நகைச்சுவை என..)

Tuesday, December 23, 2008

சாமிகிட்ட... சொல்லி புட்டேன்...

சாமிகிட்ட... சொல்லி புட்டேன்...
உன்ன நெஞ்சில்... வச்சி கிட்டேன்...

ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்...
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்....
(சாமிகிட்ட சொல்லி)

ஒரு கோடி புள்ளி வச்சு
நான் போட்ட காதல் கோலம்
ஒரு பாதி முடியும் முன்னே
அழிச்சிருச்சு காலம்! காலம்!
இன்னொரு ஜென்மம் நான் மறுபடி பொறந்து வந்து
உனக்காக காத்திருப்பேன்...
அப்பவும் சேராமல் இருவரும் பிரியனுன்னா
பொறக்காமல் போயிடுவேன்....
(சாமிகிட்ட சொல்லி)

தெப்ப குளத்தில் படிஞ்ச பாசி...
கல்லெறிஞ்சா கலையும்? கலையும்?
நெஞ்சக்குளத்தில் படிஞ்ச காதல்
எந்த நெருப்பில் எரியும்? எரியும்?
நீ போன பாத மேல...
சருகாக கடந்தா சுகமா?
உன்னோட ஞாபகம் எல்லாம்
மனசுக்குள்ள இருக்கும் ரணமா?
கட்டுக் காவல் மீறி வர
காதல் நெஞ்சு கெஞ்சுதே...
(சாமிகிட்ட சொல்லி)

மனசுக்குள்ள பொத்தி மறச்ச‌...
இப்ப எதுக்கு வெளியில சிரிச்ச?
கனவுக்குள்ள ஓடிப் புடிச்ச...
நெசத்திலதான் தயங்கி நடிச்ச...
அடி போடி பயந்தாங்கொள்ளி...
எதுக்காக ஊம ஜாட?
நீ இருந்த மனச அள்ளி
எந்த தீயில் நானும் போட?
உன்னை என்னை கேட்டுகிட்டா காதல் நெஞ்சில் தட்டுச்சு?
(சாமிகிட்ட சொல்லி)

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home