தமிழ் பூக்கள்

எனக்கு பிடித்தவை அனைத்தும்....(அனுபவம், பூக்கள், பாடல், நகைச்சுவை என..)

Tuesday, February 26, 2008

அனுபவம் 1

கும்பகோண தீ விபத்திற்கு நிதி திரட்டுவதற்காக எங்கள் கல்லூரியில் "காக்க காக்க" திரைப்படத்தை திரையிட்டனர். எங்க வகுப்பிலிருந்து 25 க்கும் மேற்பட்டோர் சென்றிருந்தோம்.

மறுநாள் வகுப்பில் எங்களுக்கு வார தேர்வு, எவரும் படிக்கவில்லை. ஆசிரியை வந்து கேள்விகளை கொடுக்க ஆரம்பித்துவிட்டார். நாங்கள் அனைவரும் திருதிருவென முழித்தோம். அவரே புரிந்து கொண்டு யாரும் படிக்கவில்லையா? என வினவினார், ஆம்! என்றோம்.

நேற்று யார் யார் படம் பார்க்க சென்றீர்கள்? என கேட்டார். எனது தோழி உடனே எழுந்து நின்றுவிட்டாள், நானும் எழுந்து நிற்க வேண்டிய சூழ்நிலை. (நாங்கள் இருவரும் எப்பொழுதும் ஒன்றாகவே இருப்போமென கல்லூரியில் எங்களை தெரிந்த அனைவருக்கும் தெரியும்) வேறுயாரும் எழவில்லை.

இவர்களாவது உருப்படியாக ஒரு வேலை செய்திருக்கிறார்கள்! என்று சொல்லி, எங்கள் இருவரையும் தவிர மற்றவர்கள் அனைவரையும் அவர் கொடுத்த கேள்விகளை இம்போசிசன் எழுத சொல்லிவிட்டார் ஆசிரியை.

அந்த வகுப்பு முடிந்ததும் எங்கள் இருவருக்கும் விழுந்தது பாருங்கள் அடி... நினைத்தாலே இன்னும் வலிக்கிறது....

Labels: ,

3 Comments:

Blogger cheena (சீனா) said...

எதிர்பாராமல் கிடைக்கும் பாராட்டுகள் மகிழ்ச்சியைத் தரும்.

March 2, 2008 at 6:54 PM  
Blogger Malar said...

ம்.. உங்களுக்கும் நிறைய அனுபவம் இருக்கும் போல..

malar

March 3, 2008 at 5:43 AM  
Anonymous Anonymous said...

ஹா ஹா கல்லூரி என்றாலே கலாட்டாக்கள்தானே..

July 17, 2010 at 7:18 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home