தமிழ் பூக்கள்

எனக்கு பிடித்தவை அனைத்தும்....(அனுபவம், பூக்கள், பாடல், நகைச்சுவை என..)

Saturday, February 9, 2008

நகைச்சுவைகள்

நான் சிரித்ததில் சில நகைச்சுவைகள் உங்களுக்கும்..


"தாத்தா, ஓடிப் போய் ஒளிஞ்சுக்கோங்க! டீச்சர் வர்றாங்க..."
"நான் எதுக்கு ஒளியனும்?"
"நீங்க செத்துப்போயிட்டதா சொல்லி நேத்து லீவ் போட்டிருந்தேன்!"

-------
சார்: பொதிகை மலை எங்கு இருக்கு?
ஸ்டுடென்ட்: தெரியல சார்..
சார்: பென்ச் மேல ஏரு..
ஸ்டுடென்ட்: பென்ச்ல ஏருனா தெரியுமா சார்?

-------
"உங்க ஓட்டலோட பிராஞ்ச் பக்கத்து தெருவுல இருக்கே.. இங்க உள்ள பலகாரத்துக்கும் அங்கே உள்ள பலகாரத்துக்கும் என்ன வித்தியாசம்?"
"ஒரு நாள்தான்!"

-------
மாணவன் 1 : நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே?மாணவன் 2 : யாரோ இங்கே தமிழாசிரியர் யாரு ன்னு இவரைக் கேட்டதுக்கு அடியேன் அடியேன்னு சொல்லியிருக்காரு.

-------
காதலன் : அங்க பாரு.. உங்கப்பா வராரு.. ஒளிஞ்சுக்கலாமா..?
காதலி : வேண்டாம்.. அவர் பார்க்கட்டும்.. அப்போதான் ஒரு வழி பொறக்கும்..
காதலன்: என்ன வழி பொறக்கும்..? நமக்கு கல்யாணம் பண்ணி வைப்பாரா..?காதலி: நமக்கு இல்லே.. எனக்கு.. கண்ட கழுதையோட சுத்தாதேன்னு சொல்லி அப்புறமாவது மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிப்பார்..!

-----
சுட்டிப்பையன்: சார், என் தலை'ல எரும்பு ஏறுது பாருங்க..!
வாத்தியார்: அதை எடுத்து போடாம, ஏண்டா என்கிட்ட சொல்ர?
சுட்டிப்பையன்: நீங்க தானே சார் சொன்னீங்க,! என் தலை'ல ஒன்னுமே ஏறலனு?

------
டீச்சர்: படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தூங்கினா போதும்.
சுட்டிப்பையன்: ஸ்கூல்லையா?? வீட்லையா டீச்சர்??

-------
ஆசிரியர்: எந்த ஒருவனுக்கு மத்தவங்களுக்கு ஒருவிஷயத்த புரியவைக்க முடியலயொ அவன் ஒரு முட்டாள். புரியுதா?
மாணவர்கள்(கொரசக) : புரியல சார்...

Labels: , , ,

1 Comments:

Blogger cheena (சீனா) said...

சிரிப்புட்ட் தோரணம் - நன்று.

March 2, 2008 at 7:02 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home